சிவகங்கை மாவட்டத்துக்காரர் செழியன். சிவகங்கையில் பள்ளிப்படிப்பை முடித்தவர். காரைக்குடி அழகப்பா பாலிடெக்னிக்கில் டிப்ளோமா படித்திருக்கிறார். பிறகு சினிமா துறையில் நுழைந்திருக்கிறார். ஒளிப்பதிவுத் துறையில் கவனம் செலுத்திய அவர், கல்லூரி படத்தின் மூலம் முழுநேர ஒளிப்பதிவாளராகியிருக்கிறார். தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் போன்ற படங்களில் பணியாற்றியவர் பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.இவர் முதலில் ஒளிப்பதிவாளராக பல படங்களில் பணியாற்றியவர். தற்போது டூ லெட் படம் மூலம் இயக்குநரானார். இவரது முதல் படமே இவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது.